இன்று நாட்டுக்கு வந்த 104 மெட்ரோ பேருந்துகள்
இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக, 'நகர்ப்புற சொகுசுப் போக்குவரத்து' (Urban Luxury Transport) திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 104 மெட்ரோ பேருந்துகளை ஏற்றிய கப்பல், இன்று (29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இப்பேருந்துகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் கொழும்பு நகர்ப்புறப் பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

Post a Comment