Header Ads



இலஞ்சம் பெற்ற பிரசன்னா, 100 இலட்சம் செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை


முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக, நிலம் ஒன்றை நிரப்புவதற்கு அனுமதி வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட 100 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை, 2027 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாக செலுத்த வேண்டும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தத் தவறினால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ், பிரதிவாதிக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.


வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரசன்ன ரணதுங்க சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், நீதிமன்றம் நிர்ணயித்த காலவரையறைக்குள் இழப்பீட்டுத் தொகையை முழுமையாகச் செலுத்துவதாக உறுதியளித்தனர். 

No comments

Powered by Blogger.