மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்திருக்கிறார் அர்ச்சுனா - இளங்குமரன் Mp
அர்ச்சுனா Mp நாடாளுமன்றத்தில் நட்பு ரீதியாக என்னுடன் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் முக்கியமாக அவர் தெரிவித்த விடயம் என்னவென்றால் youtuber என்னை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். அதனால் என்னை வைத்து பணம் சம்பாதிக்க நான் எவரையும் அனுமதிக்க மாட்டேன் ஆகவே நானே youtube செய்து நான் நல்ல வருமானத்தை பெற்றுக் கொள்கிறேன் ஆகவே அர்ச்சுனா இராமநாதனின் இலக்கு பணம் சம்பாதிப்பது இன்று 15 கோடி புலம்பெயர் மக்களை ஏமாற்றி அவர் பணம் சம்பாதித்திருக்கிறார். ஆனால் இப்போது பணம் கொடுத்த புலம்பெயர் தேச மக்களும் கொடுக்காத மக்களும் அர்ச்சுனாவை பற்றி உணர்ந்து விட்டார்கள் அதனால் அவர்களுடைய தொடர்பு இல்லாததால் தற்போது அச்சுனா நாமலை வைத்து ஐஸ்லாந்து ஜனாதிபதி நாமலின் தலைமையின் கீழ் சுகாதார அமைச்சராக இருந்து கொண்டு எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்று கற்பனை காணுகிறார். வெளிநாட்டு வாழ் உறவுகள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களையே கேவலப்படுத்தும் ஒருவர் தான் அர்ச்சுனா. புலம்பெயர் உறவுகள் தங்களுடைய தாய் நாட்டை கட்டி எழுப்புவதற்காக ஏதோ ஒரு நம்பிக்கையில், அர்ச்சுனாவிற்கு பெருந்தொகையான பணத்தை வழங்கினார்கள், அந்த நேரம் வேலை கிடைத்தால் போதும் என்று இருந்தோம். ஆனால் தற்போது சந்தோசமாக இருப்பதாக தன்னிடம் அர்ச்சுனா எம்பி கூறினார். அவருக்கு இங்கு கட்சிக்காரியாலயம் என்று ஒன்றும் இல்லை. நாமலின் வீட்டில் இருப்பதாக நான் உணர்கிறேன். இவ்வாறு ஊழலில் ஈடுபட்ட இராமநாதன் அர்ச்சுனாவிற்கு வட மாகாண மக்கள் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
- இளங்குமரன் Mp -

Post a Comment