Header Ads



இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் கண்டறியபடுகிறார்கள்


இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் கண்டறியபடுவதாகவும், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 35,000 பேர் பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.


சுகாதார மற்றும்  ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கூற்றுப்படி, நாட்டில் வாய்வழி புற்றுநோய் மிகவும் பொதுவாக கண்டறியப்படும் வடிவமாக உள்ளது.


புற்றுநோய் சிகிச்சை சுகாதாரத் துறையின் மீது பெரும் சுமையை ஏற்படுத்துகிறது என்றும், மொத்த மருந்து செலவில் கிட்டத்தட்ட 30 சதவீதம் புற்றுநோய் மருந்துகளுக்கு ஒதுக்கப்படுகிறது என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.