Header Ads



சல்மான் ருஷ்டி மீது, மேடையில் வைத்து தாக்குதல்


நியூயோர்க் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது மேடையில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய பிரபல எழுத்தாளர் பல ஆண்டுகளாக மரண அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வந்த நிலையில், இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புக்கர் பரிசு வென்றவரான இவர், சௌதாகுவா நிறுவன நிகழ்வில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தபோது அவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த நிகழ்ச்சியில் பார்வையாளராக இருந்த நபர் திடீரென்று மேடை மீது ஏறி ருஷ்டியை தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், சல்மான் ருஷ்டியிடம் விரைந்து காப்பாற்றியுள்ளதுடன்,தாக்குதலை மேற்கொண்ட நபர் பிடிக்கப்பட்டுள்ளார். 

1 comment:

Powered by Blogger.