Header Ads



நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதைக் கண்டு, மக்கள் ஆச்சரியப்பட வேண்டாம் - டயானா கமகே


நாளாந்தம் அரச அமைப்புக்கள் பல மில்லியன் ரூபா நட்டத்தைச் செலுத்துவதால், நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் ஆச்சரியப்பட வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

இன்று -12 பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சுமார் 20 மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அரச நிறுவனங்களுக்கு 286 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. இதன் மதிப்பு நாளாந்தம் சுமார் 790 மில்லியன் ரூபாவாகும்.

இலங்கையில் சுமார் 527 அரச அமைப்புக்கள் உள்ளதாகவும், அவற்றில் 52 மாத்திரமே இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை போக்குவரத்து சபை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களாகக் கருதப்படுவதாகவும் டயானா கமகே குறிப்பிட்டார்.

அந்த அரச அமைப்புக்களின் பெறுமதி சுமார் ரூ. 12,000 பில்லியன் ஆனால் கடந்தாண்டு அவை ஈட்டியது வெறும் 30 கோடி ரூபா வருவாய் எனவும் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் 0.25 வீதமாகும்.

அத்தகைய நிதிகளை நிலையான வைப்புத்தொகையில் வைப்பு செய்தால், மதிப்பில் சுமார் 20 சதவீதத்தை அரசாங்கம் பெற்றிருக்க முடியும்.

எனவே நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்மானங்களை உடனடியாக எடுக்க வேண்டும் என டயானா கமகே வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.