Header Ads



போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை பகுதிக்குள் பிரவேசிப்பதை தடுக்க முடியாது, நீதிமன்றம் அறிவிப்பு, பொலிஸாருக்கு ஏமாற்றம்


நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் கேமிந்த பெரேரா நிராகரித்துள்ளார்.

குற்றம் நடந்தால், அதை எதிர்கொள்ள அதிகாரம் உள்ளதால், அந்த கோரிக்கையை நிராகரிப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கோட்டை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.