Header Ads



கர்ப்பிணிப் பெண்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம்


கர்ப்பிணிப் பெண்கள் கடவுச்சீட்டுக்களைப் பெற வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இன்று (07) காலை  கடவுச்சீட்டு பெறுவதற்காக குடிவரவு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பாதுகாப்பு மற்றும் பொறியியல் சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் மொஹான் குமாரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கர்ப்பிணிப் பெண் கண்டிப்பாக வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. அவருடைய நிலையை உறுதிசெய்த பிறகு அவருக்கு உதவி செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.