Header Ads



மிஸ்டர் பீன் வேடத்தில் நடிக்கும் ரணில், 134 பேர் சொல்வதை கேட்க வேண்டும், இல்லையெனில் என்ன நடக்குமென அவருக்கு தெரியும்


 நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்த கருத்துக்கள்.

பிரதமராக பதவி வகித்த நாள் முதலும் புண்ணியத்தால் ஜனாதிபதியாக பதவியேற்ற நாளிலிருந்து நாம் தீர்க்கதரிசன முன்னறிப்புகளை  தவிர வேறு எதையும் முன்வைத்தாக காணமுடியவில்லை.மிஸ்டர் கிளின் உண்மையில் நகைச்சுவைகளை வழங்கும் மிஸ்டர் பீன் வேடத்தில் இவர் நடிக்கிறார். இந்நாட்டின் ஒட்டு மொத்த மக்களின் போராட்டமோ அவருக்கு நகைச்சுவையாக தெரிகிறது. இந்தநாட்டின் துன்பப்படும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அவர் வரவில்லை.அவர் ஆட்சிக்கு வந்த முக்கிய காரியம் இப்போது நடந்து கொண்டிருப்பதைக் காணலாம். நாட்டுக்கு சென்று வந்த பசில் ராஜபக்ச இப்போது நாட்டுக்கு செல்வதில்லை.தப்பிய ஓடிய கோட்டா இப்போது நாட்டிற்கு வரவுள்ளதாக கேள்விப்படுகிறோம்.அடுத்த வெற்றிக்காக பசில் ராஜபக்ச தனது அரசியல் மீள் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை ஒளிந்து கொண்டு மறுசீரமைப்பை மேற்கொண்டு வருகின்றார்.

போராட்டத்தின் போது நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேறாமல் இந்நாட்டின் எதிர்கால அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் அரசியல் சதியை உருவாக்குவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க செயற்படுவதை நாம் அறிவோம்.அது ஒன்றே அரசியல் இலக்கு.ரணில் ராஜபக்ஷ இதற்கு ஒரு சிறிய உதாரணம். அதனால் தான் மக்கள் ஆணை பெற்று ஆட்சிக்கு வராத ரணில் ராஜபக்ஷ திருடர் கும்பலுடன் சேர்ந்து இன்று அந்த திருட்டு கும்பலின் பாதுகாப்புக்காக பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களின் பிரச்சனைகளுக்காக மத்தியில்  வெட்கம் இல்லாமல் மோசடி மிக்க திருடர்களின் ஆதரவுடன் அதிகாரத்திற்கு வந்துள்ளார். நாட்டையே அழித்த ராஜபக்ச கும்பலின் 134 பேரின் வாக்கில் இருந்து தான் இந்நாட்டு மக்களின் பிரச்சனைகளை கேலி  கேலி செய்யும் அரச அதிபராக மாறிவிட்டார்கள்.இது ஒரு ஆணை அல்ல போலி ஆணை.எனவே, திருடர்களின் எதிர்காலத்திற்காக நாட்டை அழித்த ராஜபக்சவுக்கு ஆதரவாக நிற்கும் ரணில் ராஜபக்சவிற்கு எதிராக நாட்டு மக்கள் புத்திசாலித்தனமாக ஒன்றிணைந்தால்,இவரையும் திருட்டு கும்பலையும் விரட்ட முடியும்.


ரணில் விக்கிரமசிங்க வீட்டுக்குச் சென்றதை மறந்து போயுள்ளார், கடந்த பொதுத் தேர்தலில் வீட்டுக்குச் சென்றவர் தேசியப்பட்டியலில் மூலமே பிரவேசித்தார்.  கொழும்பு மாவட்டத்தின் மொத்த வாக்குகளில் ரணில் விக்கிரமசிங்க எத்தனை வாக்குகளைப் பெற்றார் என்பது கூட எனக்குத் தெரியாது.  தனிப்பட்ட விருப்பு வாக்குகளை எடுக்க முடியவில்லை.


இன்று ராஜபக்சர்களை பாதுகாக்க முன் வந்துள்ளார்.ராஜபக்சர்களுக்கு தண்டனை வழங்குவதை விட்டும் தடுத்து மக்கள் போராட்டத்தை நகைப்பாக பார்த்து எடைபோட ரணில் முற்பட்டால் அதற்கு இந்த நாட்டு மக்கள் அனுமதிக்கத் தயாராக இல்லை.  எனவே இந்தப் போராட்டத்திற்காக முன் நின்ற மக்களுக்கு ஒரு நோக்கம் இருந்தது, நம்பிக்கை இருந்தது, கோரிக்கைகள் இருந்தன, அந்த கோரிக்கைகள் அனைத்தும் இன்னும் அப்படியே இருக்கின்றன.ஆனால் போராட்டத்தால் எழும் பல்வேறு பிரச்சினைகளை ஒடுக்கும் வகையில் நிற்கும் ஜனாதிபதி இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.


நீச்சல் தடாகத்தில் குளித்தவர்களையும், அந்த மாளிகையைத் தாக்கிய குழுக்களையும் பார்த்து, இவர்களையெல்லாம் வேவு பார்த்து  தண்டிக்கச் செல்கிறார். ராஜபக்சக்களை அடித்து விரட்டிய ராஜபக்சவின் அதிகாரத்தை விரட்டியடித்த இந்நாட்டு பிரஜைகள் கூண்டில் அடைக்கப்படுவதை நாட்டு மக்கள் ஒருநாளும் விரும்பப்போவதில்லை.


இந்நாட்டு மக்களுக்கு உணவும்  கொடுக்காமல், டீசல், மண்ணெண்ணெய், பெட்ரோல் பிரச்சினையை ஒரு பக்கம் வைத்து கொன்று குவிக்கிறார்.இதையெல்லாம் செய்துவிட்டு நீங்கள் இன்னும் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று இந்நாட்டு மக்கள் சொல்வார்கள் என்று ரணில் நினைக்கலாம்.  ரணில் ராஜபக்ச ஆட்சியில் இருக்க வேண்டும் என்று யார் கூறுகிறார்கள்?  தற்போது ரணில் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு யார் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று சில ஊடகவியலாளர் சந்திப்புகளை நாம் பார்த்திருக்கின்றோம்.  எனவே, ராஜபக்சேவை காக்க யாராவது வந்து, ரணிலுக்கு அதிக அதிகாரம் கொடுத்து, ரணிலை இருக்க விடுங்கள் என்று மீடியாக்களிடம் கூறினால், அது ரணிலுக்குத்தான், நாட்டுக்காக அல்ல, ராஜபக்சர்களுக்கான நலவுக்கை.எனவே, ராஜபக்சக்களை பாதுகாக்கும் ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று யாராவது சொன்னால் அவர்களை துரோகிகளாகவே பார்ப்போம்.திருடர்களின் தயவில் வந்து திருடர்களை பாதுக்காக்கும் ரணிலை இந்நாட்டில் படித்த புத்திசாலி மக்கள் ஏற்றுக்கொள்ள மட்டனர்.


எனவே, ரணில் இப்போது ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்த 134 பேரும் சொல்வதை தான் ரணில் விக்ரமசிங்க செய்ய வேண்டும், இல்லை என்றால் என்ன நடக்கும் என்பது அவருக்கு தெரியும்.அவரது நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முக்கிய தடையாக இருக்கும்.பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் உள்ளிட்ட சொத்துக்கள் தீ வைக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  சட்டத்தை அமுல்படுத்துவதில் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் அந்த எம்.பி.க்களின் வீடுகள் எரிக்கப்பட்டதையும் அவர்கள் வீதியில் பிச்சை எடுப்பதாகவும் நாம் பார்க்கவில்லை.


விரைந்து விரைந்து நஷ்ட ஈடு கொடுக்க ரணிலுக்குள்ள தேவை என்ன? விக்கிரமசிங்க இந்நாட்டு மக்களை முட்டாள்கள் என்று நினைக்கிறார்.


இன்றும் எண்ணெய் வரிசைகள் அப்படியே உள்ளன.ஆகஸ்ட் மாதம் முதல் எண்ணெய் கொண்டு வர வழியில்லை என ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார்.அடுத்த மாதம் எண்ணெய் கொண்டு வர முடியாது என முன்னறிவிப்பு கூறுகிறார்.உங்களால் முடியும் என்பதை பார்க்க முடியாது.எனவே இந்த டீல் அரசியலில் இருந்து வந்த ஜனாதிபதி நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் கொண்டவர் அல்ல என்பதை எம்மால் பார்க்க முடியுமாக இருக்கிறது.


இப்போது அமைச்சர் காஞ்சனாவும் அடுத்த இரண்டு மாதங்களில் எண்ணெய் கொண்டு வர எங்களிடம் பணம் இல்லை என்று கூறுகிறார், திறைசேரி மட்டுப்படுத்தியுள்ளது.எண்ணெய் கொண்டு வர 500 மில்லியன் டொலர்கள் தேவை, ஆனால் அதிலிருந்து 500 மில்லியன் டொலர்கள், விடுவிப்புத் தொகை 250 மில்லியன் டொலர்கள் என்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் குறைந்தபட்சம் 150 மில்லியன் டொலர்களே வழங்கப்படும்.திறைசேரி கூறும் விடயத்தை தெரியப்படுத்த, அமைச்சர் தேவையா?  நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இதனையே கூறுகிறார்.  வருங்காலத்தில் கஷ்டம், உணவுத் தேவையை இழப்போம், இரண்டு வருடங்களில் இது அதிகரிக்கும் என்றே கூறுகின்றனர்.


ஹரீன் பெர்னான்டோ தொடர்பாகவும் இதன் போது கருத்துத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.