Header Ads



பாராளுமன்ற வளாக போராட்டம் வாபஸ் - 17 ஆம் திகதி மீண்டும் ஆரம்பம்


பாராளுமன்ற வளாகத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் வசந்த முதலிகே அறிவித்துள்ளார்.

இந்தப் போராட்டம் தியத்த உயனவில் முன்னெடுக்கப்பட்டது. அடுத்த பாராளுமன்ற அமர்வு வரையிலும் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அவர் ​தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வு, எதிர்வரும் 17ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.