Header Ads



அமைச்சரவை மீண்டும் கலைப்படவுள்ளதா..? இன்றைய விசேட கூட்டத்தில் வாக்குவாதம்


பல சர்ச்சைகளுக்கு மத்தியில் அண்மையைில் பதவியேற்ற அமைச்சரவை மீண்டும் கலைப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சமகால அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் பதவி விலகுவது குறித்து இன்று -06- நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர். 

இதன்போது கடும் கோபம் அடைந்த ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் இடையில் கடும்வாக்குவாதம் இடம்பெற்றதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு இன்று ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். அதற்கமைய இன்று மாலை 5.30இற்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.