Header Ads



மகிந்த தனது பெரும்பான்மையை, நிரூபிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கான பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுவதற்கான கால எல்லையை ஜனாதிபதி அதிகரித்துள்ளார்.

அடுத்து வரும் 48 மணித்தியாலங்களில் பெரும்பான்மை நிரூபித்துக் காட்ட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னர் வழங்கப்பட்ட 24 மணி நேர காலக்கெடு தற்போது 48 மணி நேரமாக நீடிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் பசில் ராஜபக்சவிடம், மைத்திரி தெரிவித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுதந்திர கட்சி உறுப்பினர்களை அழைத்த ஜனாதிபதி, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய 113 என்ற பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக உறுப்பினர்கள் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. President taking the side of MR... and allowing illegal Million Dollar Deals to buy MPs..

    Fate of this Sweet Land.

    Are they fighting and greedy for serving this land and its people ? if that is the case why fighting in parliament and destroying public properties and slapping policeman?

    Still Allowing such misbehaving MPs free but minor cases of public s are in Jail.

    ReplyDelete

Powered by Blogger.