சிறுபான்மை கட்சிகளுடன் பேச மகிந்த திட்டம் - விரும்பிகேட்கும் அமைச்சுக்களை ஒப்படைக்கவும் தயார்
தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சிறுபான்மை சமூகத்தின் கட்சிகளையும் அரசுக்குள் இணைப்பது குறித்தும் அதற்காக அவர்களுடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கும் மஹிந்த ராஜபக்ச தரப்பு தீர்மானித்துள்ளது.
இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற அரச ஆதரவு கட்சித் தலைவர்கள் மட்டும் எம் பிக்களின் சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்துவதற்கும் -அதற்காக தேவைப்படின் தற்போது முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை வகிப்பவர்கள் அவற்றை விட்டுக் கொடுப்பதென்றும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது
திங்கட்கிழமைக்குள் அரசியல் நெருக்கடிக்கு முடிவு காண்பதென்று இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Ramasamy Sivarajah
Mahinda s offer for community they represents or ministry they can earn within short period
ReplyDelete