Header Ads



பாலித்தவை கைது செய்யுமாறு, ஆளும்கட்சியினர் முழக்கம்

நாடாளுமன்றத்துக்குள் நேற்று கத்தியுடன் வந்திருந்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் பாலிய தெவரப்பெருமவைக் கைது செய்யுமாறு ஆளும்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
மகிந்த ராஜபக்ச இன்னமும் அவைக்கு வராத போதும், நாமல் ராஜபக்ச சபா மண்டபத்தில் நிலைமைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்றக் கூட்டம் ஆரம்பமாகவிருந்த நிலையில், சபாநாயகரின் ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் ஆக்கிரமித்துள்ளனர்.

சபாநாயகரின் ஆசனத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் அருந்திக பெர்னான்டோ அமர்ந்துள்ளதால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

இதனால் நாடாளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.