Header Ads



முஸ்லிம்களை அழிக்க தலைமை தாங்கிய கருணா, விசாரணைக்கு வேண்டுகோள்

முஸ்லிம் சமூகத்தை அழிக்க தலைமை தாங்கிய கருணா மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில் கிழக்கில் இனப்படுகொலை செய்து முஸ்லிம் சமூகத்தை அழிக்க கருணா தலைமை தாங்கினார். இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தற்போது கருணா முஸ்லிம்களைப் பற்றி வெளியிடும் கருத்துக்களின் மூலம் ஒரு விடயம் தெளிவாக புரிகின்றது.

அதாவது கருணா ஆயுத பலத்தோடு இருந்த காலத்தில் முஸ்லிம்கள் மீது எவ்வாறு இனப்படுகொலைகளை செய்திருப்பார் என்பது தெரிவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் மற்றும் தமிழ் சமூக உறவை சீரழிக்க நினைக்கின்ற கருணா போன்றவர்களுக்கு காலம் தக்க பதிலளிக்கும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

4 comments:

  1. கருனையே அற்றவனது பெயர் கருனா!

    ReplyDelete
  2. இன்று பல தமிழ் தீவிரவாதிகள் வேறு வழியில்லாமல் கருணாவை பிடித்து தொங்கவேண்டிய நிலையிலுள்ளனர் காரணம் அவன் முஸ்லிம்களை எதிர்ப்பதால்.

    ReplyDelete
  3. இதனை எப்போதோ செய்திருக்க வேண்டும்.

    ஒருத்தர் பொன்னாடை போர்த்தினார், மற்றவர்கள் கைகட்டி பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு, தங்களது பதவிக்கு சிவப்புக் கொடி என்று வரும் போது பேசுகிறார்கள்.

    இனியாவது நடவடிக்கை எடுக்கப் பாருங்கோ.

    ReplyDelete

Powered by Blogger.