Header Ads



அமைச்சர் எம். எச். ஏ. ஹலீமின் விளக்கம்

-இக்பால் அலி-

நமது மண்ணில் பிறந்து சவூதி அரேபியாவில் தேசம் தழுவிய செல்வாக்கும் அறிமுகமும் வாய்க்கப் பெற்ற சாதிக் ஹாஜியார் இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரை செல்லும் மக்களுக்காகவும் மற்றும் இலங்கையிலிருந்து ஹஜ் நடடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு பக்கதுணையாக இருந்து வருபவர். இவர் ஹரத்திலுள்ள குர்ஆன் வெளியீட்டுப் பதிப்பகத்தன் தலைவருமாக இருந்து செயற்படுவர். 'சிலோன் ஹவுஸ்' ஊடாக இலங்கையிலிருந்து ஹஜ் செல்லும் யாத்திரையகர்கள் முதல்  மார்க்க விடயங்கள் மற்றும் சமூகப் பணிகளில் மகத்தான சேவையாற்றி வருகின்றராவர் என்ற வகையில் தடம் பதித்துக் கொண்டவர்.  இவரிடம் காணப்படும் சிலோன் ஹவுஸை அமைச்சர் ஹலீம் மீட்பதற்கு சபதம் இட்டுள்ளதாக என இணையத்தளத்தில் வெளியான செய்தியானது உண்மைப்குப் புறம்பான செய்தியாகும். எனக்கும் அவருக்கும் இடையே இருக்கின்ற நெருக்கமான உறவில் விரிசலை ஏற்படுத்துவதற்காக இணையத்தள ஊடகங்கள் திரிவு படுத்தி வெளியிட்ட செய்தியாகும் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

சவூதி அரோபியயாவிலுள்ள சிலோன் ஹவுஸை அமைச்சர் ஹலீம் மீட்பதற்கு சபதம் இட்டுள்ளதாக என இணையத்தளத்தில் வெளியான செய்தி தொடர்பாக அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

சாதிக் ஹாஜியார் சவூதி அரேபியாவில் சுமார் 48 வருடங்களாக வாழ்ந்து வருபவர். இலங்கையிலிருந்து சென்று சவூதி நாட்டு பிரஜா உரிமை பெற்ற ஒருவர் அவராகத்தான் இருப்பார் எனக் கருதுகின்றேன்.  சிலோன் ஹவுஸ்  கட்டிடத்தை  அந்நாட்டுச் சட்ட திட்டங்களுக்கு இணங்க  இலங்கை முஸ்லிம்களுடைய  நலன்களுக்காகவும்; நீண்ட காலமாக எந்தவிதமான இலாபமுமின்றி பொது நலத்துடன் அல்லாஹ்வுக்காக பயன்படுத்தி வருகின்றார். இதனைப் பராமரித்து வந்த சாதீக் ஹாஜியார் தற்போது சுகயீனமாக இருப்பதால் சிலோன் ஹவுஸை நாம் அதனை சிநேகபூர்வமாக அவரிடமிருந்து பெற்று ஹஜ்ஜாஜிகளின் நலன்களுக்காக பயன்படுத்த முடியும் என்று தான் கூறியதாக அமைச்சர் தெரிவித்தார். 

அதனை பெற்றுக்கொள்வதற்கு அது தொடர்பாக நான் எந்தவிதமான சபதமும் இடவில்லை. அவ்வாறான வார்த்தைப் பிரயோகம் பயன்படுத்த வில்லை.

இந்தச் செய்தியை உண்மைத் தன்மைக்கு மாறாக தேவையற்ற விடயங்களையெல்லாம் திரிவுபடுத்தி இணைத்தள ஊடகங்கள் பிழையான  நடடிவடிக்கைகளுக்கு வலிகோலுகின்றன  என  அமைச்சர் தெரிவித்தார்.

சாதிக் ஹாஜியார் குறிப்பாக மக்காவில் இருந்து  கொண்டு மறைமுகமாக முஸ்லிம் சமூகதத்திற்காக தான் ஒரு தனி மனிதராக இருந்து ஆற்றுகின்ற சேவை அளப்பரியது. இவர் செய்யும் சேவை என்றும் நன்றியுணர்வுடன் பாராட்டப்பட வேண்டியவை. இவர் தொடர்ந்து எமது சமூகத்திற்கு தொடர்ந்து சேவைகள் புரிய அல்லாஹ் நீடித்த ஆயுளையும் ஆரோக்கியமான உடல் நலத்தையும்  வழங்க  அல்லாஹ் நல்லருள் புரிய வேண்டும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.