Header Ads



வசீம் தாஜுதீன் கொலை - சாட்சிகளை மறைத்த OIC கைது


வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று மாலை இரகசிய பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

வசீம் தாஜுதின் கொலை தொடர்பில் சாட்சிகளை மறைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் OIC சுமித் பெரேரா என்ற அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் பல தகவல்கள் வெளியான நிலையில் தற்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை தற்போது பரபரப்பாக உள்ளது.

No comments

Powered by Blogger.