Header Ads



இன்றும் மைத்திரியை சந்தித்த ரணில் - அமைச்சரவை நியமனம் தொடர்பில் ஆராய்வு

பொது தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதோ அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புதிய அமைச்சரவை நியமனங்கள் தொடர்பில் அங்கு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

நாளைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி பிரமானம் செய்துகொள்ளவுள்ளார் எனவும், அத்தோடு அமைச்சரவை நியமனங்களும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.