Header Ads



முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்பட்ட 2 தேசியப் பட்டியல்கள், மிகவிரைவில் பறந்துபோகும்..!

- யு.எல் -

ஐ. தே.கட்சி ஊடாக முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களையும் – மிக விரைவில், உரிய பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மு.காங்கிரசின் உயர்பீடத்தினைக் கூட்டி, அதன் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொண்டு, கட்சிக்கான தேசியப்பட்டியல் நியமனம் – உரிய பிரதேசங்களுக்கு வழங்கப்படும் என, கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், வர்த்தமானியில் பிரசுரிக்கும் பொருட்டு,  தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கான நபர்களின் பெயர்கள் உடனடியாக வேண்டப்பட்டமை காரணமாக, கட்சிக்கும் தலைமைத்துவத்துக்கும் நம்பிக்கையான இருவரின் பெயர்கள், முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு தற்காலிகமாக பரிந்துரைக்கப் பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களிலும், கட்சியின் தேசியப்பட்டியலுக்கு இவ்வாறு நம்பிக்கையானவர்களின் பெயர்கள் தற்காலிகமாக இடப்பட்டமை நினைவு கொள்ளத்தக்கது. ஆயினும், தற்காலிகமாக பெயரிடப்பட்ட நபர்கள், தேசியப்பட்டியல் உறுப்புரிமையினை, தலைமையின் உத்தரவுக்கிணங்க ராஜிநாமா செய்து கொடுத்தவுடன், அந்த வெற்றிடத்துக்கு, கட்சியால் தீர்மானிக்கப்படும் நபர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கட்சியின் மேற்படி முக்கியஸ்தர் கூறினார்.

இவ்வாறானதொரு நிலையில், முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பில், கட்சிக்கெதிராக பல்வேறு வதந்திகளை சிலர் பரப்பி வருவதாகவும், அது குறித்து, கட்சி ஆதரவாளர்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றும் கட்சித் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

6 comments:

  1. நீர் வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சராக இருந்தபோது தேர்தல் நெருங்குவதை அறிந்த ஹக்கீம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் நீரை தடைசெய்து மக்களை தாகத்தில் போட்டுவிட்டு. தேர்தல் காலங்களில் அபகுதிகளுக்கு சென்று நீரை திறந்து விடசொல்வார் முட்டாள் வாக்க்காலர்களும் "தலைவர் வந்தார் நீர் வந்துவிட்டது" என்றுகூறி தலைவரை தலையில் தூக்கிவைத்து கொணடாடுவார்கள். அதே போன்று இம்முறையும் தனது அண்ணனையும்,நண்பனையும் தேசிய பட்டியல் மூலம் தேர்வு செய்த ஹக்கீம் எதிர்வரும் பிரதேச சபை தேர்தலிலோ அல்லது மாகான சபை தேர்தலிலோ அண்ணனையும்,நண்பனையும் ரிஸைன் பண்ணிவிட்டு ஏமாளிகள் அதிகமாக இருக்கும் ஊர்களை பார்த்து அந்த ஊர்களுக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரை கொடுத்து அந்தமக்களது வாக்குகளை கொள்ளையடித்து தனது இருப்பை தக்கவைத்துகொல்வார்.

    ஏமாறும் மக்கள் இருக்கும்வரை ஏமாற்று பேர்வழிகள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். என்றுதான் திருத்துமோ இந்த சமூகம். அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டு நம் சமூகத்தை.

    ReplyDelete
  2. தாமதித்து கொடுத்தால் அப்பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியம் கிடைக்காதே,

    ReplyDelete
  3. ஆமா, அதுசரிண்டு எடுத்துகிட்டாலும் உங்க தல no தலய விட எங்க தல மேல்தான், அத்தோட நீங்க கவமா இரிங்க.., ஏமாந்துடுவீங்க roobi

    ReplyDelete
  4. We should believe SLMC leader discition not to always think diffently,he never neglect anyone.

    ReplyDelete
  5. Elaam dennagn kasi arsiyal than pure Muslim illa kachigal katikodukum inam SL.Muslim BBS Ku tips kodukiraargal idvidava

    ReplyDelete
  6. Vannikku nlmp illai enil vanniyil marankal inimel irukkathu........slmc leader.immakkalai thirumpipparppara

    ReplyDelete

Powered by Blogger.