Header Ads



ரணில் விக்கிரமசிங்க தோல்வி அடைவது உறுதி - அஸாத் சாலி

கூரகல பள்ளிவாசலை தாக்க முயற்சித்த இனவாதிகள் குறித்து உரிய நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும். மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் இனவாதிகளுக்கு இடமில்லை என மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி தெரிவித்தார்

முஸ்லிம்களின் பிரச்சினைகளை புத்தசாசன அமைச்சரிடம் முன்வைத்துள்ளேன். தம்புள்ளை ,கூரகல, கிரான்ட்பாஸ் பள்ளிவாசல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பியுள்ளேன்

அத்தோடு 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட மக்களுககு; வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பாராளுமன்ற தேர்தலுக்கு சென்றால் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் தோல்வி அடைவது உறுதி என்றும் அவர் சுட்டிகாட்டினார்.

1 comment:

  1. VoiceSriLanak, நீங்கள் சொல்வது சரி. இவரைப் பற்றி விமர்சித்து விமர்சித்து அலுத்து விட்டது, ஆகப்போவது ஒன்றுமில்லை.

    கொழும்பு மாளிகாவத்தை சண்டித்தன பாணியில் மொத்த நாட்டையும் பார்க்கின்றார், என்ன செய்வது.

    இவரின் வாய் காரணமாக அடிபட்டு சாக வேண்டும் என்று சில பல அப்பாவி முஸ்லிம்களின் தலைஎழுத்து இருந்தால் நானும், நீங்களும் என்னதான் செய்வது?

    ReplyDelete

Powered by Blogger.