Header Ads



முஜிபுர் ரஹ்மான் ஒரு இனவாதி - விமல் வீரவன்ச

-அஸ்ரப் ஏ சமத்-

இன்று மு.பகல்  கொழும்பு ஸ்ரீpறிலங்கா சுதந்திரக் கட்சி அழுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர்கள் விமல் வீரவன்சவும் பந்துல குணவர்த்தன கலந்து கொண்டனர். 

அங்கு விமல் வீரவன்ச  தெரிவித்த கருத்து – நேற்று ஜ.தே.கட்சி தலைமையகமான  சிறிகொத்தவிற்கு முன்னாள் நடைபெற்ற ஆர்ப்பாட்டித்தில்  மேல்மாகணசபை உறுப்பிணர் முஜிபுரஹ்மானும் மற்றும் காடையர்களையும்  கொண்டு வந்து  சிறிகொத்தவிற்கு எதிரே ரணில்-மைததிரி கள்ள ஒப்பந்தத்துக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க வந்தவர்களையும் அப்பாவி பெண்களையும் சிறுவர்களையும் தாக்கியதாக இன்றைய ஊடக மாநட்டில் குற்றம் சுமத்தினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தாவது – முஜிபுரஹ்மான் ஒரு இனவாதி எனத் தெரிவித்தார். இந்த நாட்டின் இறைமைக்கு எதிராக செயல்படும் நிகழ்ச்சிநிரல்களுக்கு ஒரு சமுக இயக்கமான குணதாச மற்றும் டொக்டர் வசந்த பண்டார போன்றோர்களையும் இவர்கள் தாக்கியதாக குற்றம் சுமத்தினார்.

அத்துடன் மைத்திரிபால சிறிசேனவின் மகனான 'தகம் சிறிசேனா' வின் கேள்பிரண்ட வாழும் கல்கிசை வீட்டில் 15 கோடிப்பணம் இருந்ததாகவும் இதனை சி.ஜ.டி அவ்வீட்டில் இருந்து எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது இவ்வீட்டில் உள்ளவர்கள் தலைமரைவாகியுள்ளதாகவும் இப்பணங்களை விமாண நிலையத்தில் வைத்து தகம் கொண்டு வந்து கொடுத்தாகவும் தெரிவித்தார். இப்பணம் டயஸ்போரா, மற்றும் தூதுவர் ஆலயங்கள் ஊடகா கொண்டுவரப்பட்ட ஒரு தொகைப்பணம் எனும் அவர் தெரிவித்தார்.

2 comments:

  1. YOUR LAST SESSION.BE PATIENT ALLAH WILL FINISH ALL OF YOU
    THROW FROM JAN 9TH INSHA ALLAH

    ReplyDelete
  2. weerawangsa
    neenga enna waadhi??????????????????

    ReplyDelete

Powered by Blogger.