Header Ads



அரசின் தேவையை நிறை­வேற்­று­ம், பொதுபல சேனாவும், ரவூப் ஹக்கீமும்- சாடுகிறது JVP

ஹக்­கீமும் பொது­பல சேனா­வி­னரும் அரசின் இருப்­பிற்­காக இன­வாத மத­வாதக் கருத்­துக்­களை நாட்­டிற்குள் தூண்­டு­கின்­றனர்.எனவே, இவர்­க­ளது நாடக அரங்­கேற்­றத்­திற்கு பொது மக்கள் ஏமாந்து விடக் கூடாது எனத் தெரி­வித்த ஜே.வி.பியின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா இந்த இன­வாத அர­சுக்கு எதி­ராக பொது மக்கள் அணி­தி­ரள வேண்டும் என்றும் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக ரில்வின் சில்வா மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்;

பொது­பல சேனா தேரர்­மார்­கூறும் கருத்­துக்கள் தொடர்­பாக அலட்­டிக்­கொள்ளத் தேவை­யில்லை. ஏனென்றால் அந்த அமைப்பின் பின்­ன­ணியில் அர­சாங்­கமும் பல­முள்ள ஒரு சக்­தி­யுமே இயங்­கு­கின்­றன. அச் சக்தி ஆட்­டு­விக்­கின்­றது. எனவே தான் பொது­பல சேனா எதைச் செய்­தாலும் அவர்­க­ளுக்கு எதி­ராக சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை.

அரசின் இருப்­பிற்­கா­கவும் அர­சியல் லாபத்­திற்­கா­கவும் பொது பல சேனா ஊடாக அர­சாங்கம் மத­வா­தத்தை தூண்­டு­கி­றது. யுத்தம் முடிந்த நாட்டில் மீண்டும் இனங்கள் மதங்­க­ளுக்­கி­டையே மோதல்­களை ஏற்­ப­டுத்தி அதனை தமது அர­சியல் நகர்­வு­க­ளுக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொள்ள அரசு முயற்­சிக்­கின்­றது.

மறு­புறம் நீதி அமைச்­ச­ராக பதவி வகிக்கும் ஹக்­கீமும் அரசின் தேவையை நிறை­வேற்­று­கின்றார். அவர் இன­வாதம் மத­வாதம் பேசி முஸ்லிம் மக்­களின் வாக்­குகளை கொள்­ளை­ய­டிக்கும் அர­சியல் ஏமாற்­று­வித்­தையை முன்­னெ­டுக்­கின்றார். எனவே, ஹக்­கீமும் பொது பல சேனாவும் அரசின் தேவை­களை புரிந்துணர்வோடு நிறை­வேற்றிக் கொண்­டி­ருக்­கின்றனர்.

இந்த உண்­மையை பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இன­வாத மத­வாத சக்­தி­களின் பொறியில் சிக்­கி­வி­டாது இன மதங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்­கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

அத்தோடு, இந்த அரசாங்கத்திற்கு எதிராக ஓரணியில் திரள வேண்டுமென்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.