Header Ads



'இலங்கை + பலஸ்தீனர்களுக்காக பிரார்த்தியுங்கள்’

பலஸ்தீன சகோதரர்களுக்காக இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின் அனைத்துப் விஷேட துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளு மாறு சகல முஸ்லிம்களிடமும் சமூக ஒருமைப்பாடு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு (சிடா - ஸ்ரீலங்கா) வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இது குறித்து சமூக ஒருமைப்பாடு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு (சிடா- ஸ்ரீலங்கா) விடுத்துள்ள வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த 9 நாட்களாக இஸ்ரேலிய கொடுங்கோலர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற இனச் சுத்திகரிப்பினால் முதியோர், பெண்கள், சிறுவர்கள் அடங்கலாக இதுவரை 215 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 1500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக்கப்பட்டும் உள்ளனர். 

இஸ்லாத்தின் பகைவர்களால் அப்பாவி இஸ்லாமிய சகோதரர்களின் தேசம் அழிக்கப்பட்டு வருகிறது. எதிர்கால இஸ்லாமிய சந்ததிகளை அழிக்குமாறு இஸ்ரேல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது. (16) காலை காஸா கடற் கரையில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த பலஸ்தீன எதிர்காலச் சந்ததிகளான 4 சிறுவர்கள் கோரமாக இஸ்ரேலிய கடற்படையினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

இதுவரை காஸாவில் கொல்லப்பட்டுள்ளவர்களில் 45க்கும் மேற்பட்டோர் சிறுவர்களாவர். இவ்வாறு திட்டமிட்டு கொலை செய்யப்படும் நமது சகோதர இஸ்லாமிய மக்களின் மறுவாழ்வுக்காகவும் காயப்பட்டு அவதியுறும் மக்களின் உடல் ஆரோக்கியத்துக்காகவும் அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் மன அமைதிக்காகவும் இஸ்லாத்தின் ஜென்ம விரோதிகளான இஸ்ரேலியர்களின் திட்டம் தவிடு பொடியாகி பலஸ்தீன தேசம் வெற்றிகொள்ளப்படுவதற்காக போராடும் போராளிகளின் உடல் உள வலிமைக்காகவும் இன்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் சகல பள்ளிவாசல்களிலும் விஷேட துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு (சிடா ஸ்ரீலங்கா) அனைத்து முஸ்லிம்களிடமும் வேண்டுகோள் விடுக்கிறது. 

அத்துடன், மதவாத கடும்போக்காளர்களின் திட்டங்கள் தோல்வியுறவும் இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் நெருக்கடிகள் இன்றி சுதந்திரமாக வாழ்வதற்கும் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு சமூக ஒருமைப் பாடு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு (சிடா- ஸ்ரீலங்கா) வேண்டுகோள் விடுத்துள்ளது. 

No comments

Powered by Blogger.