Header Ads



இலங்கையில் உஸ்பெக்கிஸ்தான் நாட்டு தம்பதிகளுக்கு மரண தண்டனை

நாவலையில் சீனாவைச்சேர்ந்த வீட்டுப்பணியாளர் மற்றும் அவருடைய குழந்தையை 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி 23 ஆம் திகதி கொலைசெய்தனர் என்ற குற்றச்சாட்டில் உஸ்பெக்கிஸ்தான் ஜோடியை குற்றவாளிகளாக இனங்கண்ட விசேட மேல் நீதிமன்றம் அந்த ஜோடிக்கு இன்று 16-07-2014 மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதிகளான தேவிகா டி லிவேரா தென்னகோன் மற்றும் நிமல் நம்புவசனம் ஆகியோர் கொண்ட நீதிபதிகள் குழு முன்னிலையிலேயே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

No comments

Powered by Blogger.