Header Ads



உக்ரைனின் வான் பிராந்தியத்தில் இனிமேல் இலங்கை விமானங்கள் பறக்காது..!

உக்ரைனின் கிழக்கு வான் பிராந்தியத்தில் பயணிக்க வேண்டாம் என இலங்கை விமான சேவைகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மலேசிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் சுட்டு விழுத்தப்பட்டமையை அடுத்து இலங்கையின் சிவில் விமான சேவைகள் அதிகார சபை இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக இவ் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சீ. நிமல்சிறி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை விமான சேவைகள் தாமாகவே நிலைமையை உணர்ந்து சில நாட்களுக்கு முன்பிருந்தே இந்த வான் பரப்பை விட்டு விலகி வேறு வழியில் பயணிப்பதாக அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.