சிறுத்தை தாக்கி பெண் மரணம், சிறுவன் காயம் - நாவலப்பிட்டியில் சம்பவம்
நாவலப்பிட்டி, பார்க் கேபல் தோட்டத்தைச் சேர்ந்த காட்டுப் பகுதியில் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த கால்நடைகளை மேற்பார்வையிட சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் காயங்களுடன் தப்பிச் சென்ற போதிலும் குறித்த பெண் சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
31 வயதான பெண்ணொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன், சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment