Header Ads



போத்தல் அடி வாங்கி, அவமானத்துடன் திரும்பிய துமிந்த சில்வா (வீடியோ இணைப்பு)

(Nf) நபரொருவரைக் கடத்திய சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வனாத்தமுல்ல பிரதேசவாசிகள் சிலர் பேஸ்லைன் வீதியை மறித்து 15-02-2014 எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

தெமட்டகொட ரயில் நிலைய விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வனாத்தமுல்ல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது குறித்த பகுதிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வருகை தந்தவுடன், மக்களிடமிருந்து அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போத்தலால் தாக்கப்பட்டு திருப்பியும் அனுப்பப்பட்டார் துமிந்த சில்வா.


No comments

Powered by Blogger.