Header Ads



அரசுடனான முஸ்லிம் காங்கிரஸ் உறவு சிறப்பாகவே உள்ளது - ஹரீஸ் பெருமிதம்

(Tv) 

தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது குறித்து எமது தலைவர் அமைச்சர் ஹக்கீம், ஜனாதிபதியிடம் நேரடியாகவே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அவர்களும் அது குறித்துத் தனது சம்மதத்தைத் தெரிவித்துள்ளார். அதனால் இது குறித்த விடயம் ஒரு பொருட்டல்ல என்று மு.காவின் அரசியல் துறைப் பொறுப்பாளர் எச்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். அரசாங்கத்திற்கும் முஸ்லிம் காங்கிரஸிற்குமிடையே சுமுகமான நல்லுறவு காணப்படுவதாகவும், எவ்விதமான முரண்பாடுகளும் தமக்கிடையே கிடையாது எனவும் தெரிவித்த ஹரீஸ் எம்.பி, மு.கா தனது தனித்துவத்துடன் எதிர்காலத்திலும் தொடர்ந்தும் செயற்படும் எனவும் தெரிவித்தார்.

2 comments:

  1. நீங்கள், சேர்ந்து கேட்டாலும்... சேராம கேட்டாலும் மக்களுக்கும் ஒரு பொருட்டல்ல சார் ....

    முஸ்லிம்களின் தனித்துவம் பேணுவதற்கு.. ஏன் சார் ஜனாதிபதியிடம் சம்மதம் கேட்க வேண்டும்...

    சும்மா டென்ஷன் ஆக்காம வாயபொத்திக்கு இருங்க சார்...!!!!!

    ReplyDelete
  2. கண்ணையும் காதையும் வாயையும் மூடிக்கிட்டு இருந்தால்,அல்லது பாராளுமன்றதிற்கு போர்த்திக்கு போய் போர்த்திக்கு வந்தால் அரசுடனான உறவு இனிதேதான் இருக்கும்.உங்களால் உங்கள் மக்களுக்கு என்ன பயன்?மனித உடலைப்பற்றி ஒரு கவிஞர் சொன்னார்,"வெறும் காற்றடைச்ச பையடா"என்று,அவர் சொன்னது உடலை மட்டுமல்ல உங்களைப்போன்றவர்களையும் சேர்த்துதான் சொல்லியிருக்கிறார்.வெறும் காற்றடைச்ச பையடா

    ReplyDelete

Powered by Blogger.