கல்முனை வைத்தியசாலையிலிருந்து ஜனாஸாக்கள் எடுத்துச் செல்லப்பட்டன
(யு.எம்.இஸ்ஹாக்)
நிந்தவூரில் இன்று 17-02-2014 இடம் பெற்ற வாகன விபத்தில் மரணமடைந்த அக்குரஸ்ஸ வாலிபர் இருவரது ஜனாசாக்களும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த வைத்திய சாலையில் இருந்து சற்று முன்னர் உறவினர்களால் அவர்களது ஊருக்கு எடுத்து செல்லப் பட்டுள்ளது .
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் வை.எல்.யூஸுப் மேற் கொண்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் இரண்டு ஜனாசாக்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன .
சம்பவத்தில் மரணம் அடைந்தவர்கள் 106,பிரதான வீதி கோடா பிட்டிய ,அக்குரச எனும் முகவரியை சேர்ந்த 24 வயதுடைய முகமது ஹாலித் முஹம்மது நிப்ராஸ் என்பவரும்,அதே முகமுகவரியை சேர்ந்த22 வயதுடை முஹம்மது நஜீம் முஹம்மது ரினாஸ் என்பவருமாகும்

Innallilahi wa"innaillaihi rajeun!, Peace be upon their family members. Allah willing to take them in such a way. Alhamdulillah!. Allah is enough.
ReplyDelete