Header Ads



புத்திசாதுர்யமிக்க முஸ்லிம்களுடன் விளையாட வேண்டாம் - பைசர் முஸ்தபா

அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தையே விமர்சிப்பதாக பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றியபோதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரச வாகனங்களில், அரசாங்கம் வழங்கிய பாதுகாப்புடன் சென்று முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை குறைகூறிவருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் கொழும்பில் இதற்கு இடமளிக்கப்படமாட்டாது எனவும் பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் காலத்தில் புத்திசாதுர்யமிக்க முஸ்லிம் மக்களுடன் விளையாடுவதற்கு முற்பட வேண்டாம் எனவும் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா முஸ்லிம் குறிப்பிட்டுள்ளார். NF

No comments

Powered by Blogger.