வடமாகாண ஆளுநருடன் ஐ.நா. பிரதிநிதி சந்திப்பு
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் விசேட பிரதிநிதி சலோக பெயானி வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(03) சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது ஆளுநரினால் வடமாகாணத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். இச்சந்திப்பில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவனும் கலந்து கொண்டார்.


Post a Comment