மதுபோதையில் தனது வீட்டுக்கு தீ வைத்த பெண் கைது
அதிக குடிபோதையில் வந்து வீட்டுக்கு தீ வைத்து எரித்த பெண் ஒருவர் தங்கொட்டுவ பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கொட்டுவ - தாமரகுளிய பகுதியில் நேற்று (02) இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தங்கொட்டுவ - தாமரகுளிய பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஜயசிங்க ஜேடிகே ரோஹன சந்திரலால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்படி 48 வயதான பெண்ணை கைது செய்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் குறிப்பிட்டனர். தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
Post a Comment