அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் 3 நாள் சாரணர் பயிற்சிப் பாசறை
(யு.எம்.இஸ்ஹாக்)
அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் சகல சாரணர் குளழுக்களுக்குமான மூன்று நாள் சாரணர் பயிற்சிப் பாசறை மாளிகை காடு அல் -ஹுசைன் வித்தியாலயத்தில் நடை பெறவுள்ளது.
இப்பாசறை 06ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகி 08ஆந் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு நிறைவடையவுள்ளது.
07ஆந் திகதி காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை பெண் சாரணர்களுக்கான ஒருநாள் பயிற்சி இடம் பெறவுள்ளதாகவும் இப்பாசறை நிகழ்வுகளில் மாவட்ட சாரணிய சங்க தலைவரும் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளருமான யு.எல்.எம்.ஹாசீம், மாவட்ட ஆணையாளர் ஐ.எல்.ஏ.மஜீட் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என பாசறை தலைவர் முன்னாள் மாவட்ட சாரண ஆணையாளரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான எம்.ஆய்.எம். முஸ்தபா தெரிவித்தார்.

Post a Comment