சஜித் பிரேமதாஸாவின் பதிலடி
பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை ஏற்பதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. அவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மகன் மட்டுமே. அதனை வைத்து அவருக்கு தலைமையை ஏற்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு சஜித் பிரேமதாஸ பதிலளித்திருக்கின்றார்.
ஒவ்வொருவரினதும் கருதுகோள்கள் எனக்கு அவசியமில்லை. நாட்டுமக்களின் விருப்பு எதுவோ அதற்கு நான் தலை சாய்ப்பேன். நான் பிரேமதாஸவின் மகனாக இருப்பதுதான் எனக்குரிய தகைமையா என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.
ஏழைகளின் உள்ளக்குமுறல்கள் அவர்களின் வியர்வையின் மணம் என்பவற்றை என் தந்தையைப் போல எனக்கும் தெரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் என்னிடம் இருக்கின்றது.
இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார

Post a Comment