Header Ads



நூர்ஜஹானைக் கொன்ற மந்திரவாதி கணவன் கைது

இந்தியா  - திருவொற்றியூர் சின்ன மேட்டுப்பாளையம் தெருவில் வசித்து வருபவர் முகம்மது ரபீக் (வயது 40). இவரது மனைவி நூர்ஜஹான் (வயது 31).

பில்லி, சூனியம் போன்ற மாந்திரீக வேலைகளை முகம்மது ரபீக் செய்து வருவதாகத் தெரிகிறது. எனவே இவர் அப்பகுதியில் மந்திரவாதி என்றே அப்பகுதி மக்களால் அறியப்பட்டுள்ளார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது உண்டாம்.

நேற்றும் தகராறு ஏற்படவே, நூர்ஜஹானின் குடும்பத்தினர் வந்து சமாதானம் செய்து வைத்து விட்டு சென்று விட்டனர். எனினும், மீண்டும் இரவிலும் சண்டை ஏற்படவே, மந்திரவாதி மனைவி நூர்ஜஹானை கத்தியால குத்தியதாக தெரிகிறது.  படுகாயமடைந்த நூர்ஜஹானுக்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி வழங்கப்பட்ட பின், மேல் சிகிட்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகத் தெரிகிறது. எனினும், வழியிலேயே நூர்ஜஹான் பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த திருவொற்றியூர் காவல்நிலைய ஆய்வாளர் முரளி, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.  மேலும், மந்திரவாதியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். Inne

2 comments:

  1. May Allah Grant you Highest Jannah Sister ... Ameen

    ReplyDelete
  2. ஏன்டா பன்னாட, பரதேசி மந்திரவாதி நீ உண்மையான மந்திரவாதியாக இருந்தா அந்தப்பெண்ண உண் சொல்கேக்ககூடியமாதிரி வசியம் பன்னியிருக்கலாமே? முடியாது ஏன்னா? பில்லி சூனியம் எல்லாம் பொய் பொய் பொய்........

    ReplyDelete

Powered by Blogger.