Header Ads



தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பால்நிலை தொடர்பான அறிவூட்டல்

(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான பால்நிலை தொடர்பான  அறிவூட்டல் செயற்பாட்டை முன்னெடுப்பது பற்றிய கலந்துரையாடல் பல்கலைக்கழக உபவேந்தருக்கும், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல்முன்னணியின் இவ்வேலைத்திட்டம் தொடர்பான பயிற்றுவிப்பாளர்களுக்குமிடையில் இன்று 02-07-2013  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல்முன்னணியின் இணைப்பாளர் எம்.எஸ்.ஜலீலின் ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயிலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் இவ்வேலைத்திட்டம் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய விடயங்கள் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டது.

No comments

Powered by Blogger.