தொழுகை முடிந்து வெளியே வரும்போது குண்டு வெடிப்பு - 72 பேர் மரணம்
ஈராக்கில் சிறுபான்மை அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இரு தரப்பினரும் மத வழிபாட்டு தலங்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தி பொதுமக்களை பலிவாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இதலைநகர் பாக்தாத் அருகே உள்ள பகுபா நகரில் முஸ்லிம்களின் மசூதி அருகில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. மசூதியில் தொழுகை முடிந்து வெளியே வரும்போது ஒரு குண்டு வெடித்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஒரு இடத்தில் கூடி நின்றபோது, அங்கு இரண்டாவது குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 72 பேர் கொல்லப்பட்டனர். 57 பேர் படுகாயம் அடைந்தனர்.

Post a Comment