இன்புளுவென்சா ஏ வைரஸ் - கர்ப்பிணி பெண்கள் பாதிப்பு
இன்புளுவென்சா ஏ வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்ட இரு பெண்கள் உயரிழந்துள்ளனர். மேலும், இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட எட்டு பெண்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக காசல் வீதி மகளிர் மருத்துவமனை தெரிவிக்கின்றது.
குறித்த வைத்தியசாலையின் அதிகாரி டாக்டர் குமார விக்கிரமசிங்க இது தொடர்பில் தகவல் தருகையில் கூறியதாவது, 'விசேட சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் உட்பட, மேலதிக 8 நோயாளிகள் தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகின்றார்கள்.
வெகு விரைவில் அவர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவார்கள். இன்புளுவென்சா ஏ வைரஸ் கிருமி, கர்ப்பிணி தாய்மாருக்கு மட்டுமே அதிக பாதிப்பை உண்டாக்கும் தன்மை கொண்டது. பிரசவ காலத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து காணப்படுவதே இதற்குக் காரணமாகும்' என்றார். TM
Post a Comment