மியன்மாருடன் தொடர்புகொள்ளாதே - பாகிஸ்தானை எச்சரிக்கிறது தலிபான்
மியான்மருடன் உள்ள தொடர்பை பாகிஸ்தான் அரசு துண்டிக்காவிட்டால், அந்நாட்டு தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்துவோம்'' என, தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.
மியான்மரில், வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள ராகின் மாகாணத்தில், கடந்த மாதம் முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டது. ராகின் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில், வங்கதேசத்திலிருந்து புலம் பெயர்ந்த, எட்டு லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
இவர்கள், மியான்மரில் குடியுரிமை கேட்டு போராடி வருகின்றனர். சட்ட விரோதமாகப் குடியேரியவர்களுக்கு, குடியுரிமை அளிக்க மியான்மர் அரசு மறுத்து விட்டது.இதற்கிடையே, முஸ்லிம்களின் குடிசைகளை தீ வைத்து கொளுத்தி விட்டதாகக் கூறி, கடந்த மாதம் பெரிய அளவில் கலவரம் மூண்டது. இதையடுத்து, மவுங்தா பகுதியில், அவசர நிலை அறிவிக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
""மியான்மரில் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடப்பதால் அந்நாட்டுடனான உறவை பாகிஸ்தான் அரசு துண்டித்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது, அந்நாட்டு தூதரகத்தையும் மூட வேண்டும். இல்லாவிட்டால் பாகிஸ்தானில் உள்ள மியான்மர் நாட்டினரையும், அவர்களது உடமைகளையும் தாக்குவோம்'' என, தேரிக் - இ - தலிபான் அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.
விக்கிபேடியா தரவுகளின் படி பங்களாதேஷ், பாகிஸ்தான், சவூதி அரேபியா, குவைத், எகிப்து, புரூணை, இந்தோனேசியா, மலேசியா, ஆகிய முஸ்லிம் நாடுகளில் மியன்மார் தூதரகம் உள்ளது. இந்த நாடுகள் இதுவரை தூதரக உறவுகளைத் துண்டிக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. வெட்கக் கேடு, சூடு சொரணை இல்லாதவர்களின் கைகளில் முஸ்லிம் நாடுகளின் ஆட்சி இருக்கின்றது.
ReplyDeletesariyana potti
ReplyDelete