Header Ads



ஈரானிய ஏவுகணைகளுக்கு அஞ்சும் இஸ்ரேல் - பொருளாதார தடை விதிக்குமாறு மன்றாட்டம்


ஈரானுக்கு பெரும்பாலான நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


சுமார் 32 நாடுகளுக்கு இன்று -16- கடிதங்களை அனுப்பியதாகவும் ஈரானிய ஏவுகணை திட்டத்திற்கு தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் பல நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மற்றும் உலகின் முன்னணி நபர்களுடன் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை ஈரானின் இராணுவப்படையை (IRGC) பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.