பள்ளிவாசலுக்குள் புகுந்து மௌலவியை கொன்றது யார்..?
ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள ராம்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்குள் ஒரு மௌலானா தடியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மூன்று நாட்கள் கடந்தும் குற்றவாளிகள் பற்றிய எந்தத் தடயத்தையும் காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த விவகாரத்தில் விரைவில் கைது நடக்கும் என போலீசார் கூறினாலும் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கோபம் எழுந்துள்ளது.
ராம்கஞ்ச் காவல் நிலையத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் கஞ்சன் நகரில் முகமதி மசூதி உள்ளது. மசூதிக்கு முன்னால் வெற்று நிலம் உள்ளது.
ஏப்ரல் 27ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் இதே அறையில் மௌலானா முகமது மாஹிர் தடிகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு, குடும்பத்தினர் மௌலானாவின் உடலை உத்தரபிரதேசத்திற்கு எடுத்துச் சென்றனர். ஏப்ரல் 28 அன்று அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார். BBC
Post a Comment