Header Ads



கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்


மூவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் மின்னேரிய மின்சார சபைக்கு அருகில் நேற்று(23.04.2024) இடம்பெற்றுள்ளது.


மின்னேரிய ஹென்யாய பிரதேசத்தைச் சேர்ந்த எச்.கபில பொன்சேகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நபரொருவருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில் சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் குத்தி குடும்பஸ்தரை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.