Header Ads



"தேசிய அரசாங்கத்தை அமைத்தால், பிரதமராக பதவியேற்க ரணில் தயார்"


நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால், அந்த அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தயாராக இருப்பதாக ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardane) தெரிவித்துள்ளார்.

இதனை விடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளில் இருந்து அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக, அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்க ரணில் விக்ரமசிங்க தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) கம்பஹா மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் ருவான் விஜேவர்தன கலந்துக்கொண்டார்.

இதன் போது, அரசாங்கம் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்க உள்ளதாக பரவி வரும் வதந்திகள் சம்பந்தமாக செய்தியாளர் ஒருவர், ருவான் விஜேவர்தனவிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.  

2 comments:

  1. இன்னும் இந்த ஆசை இவரை விட்டு தெரியவில்லையா இவரது காலத்தில்தான் உங்களுக்கு திட்டமிட்ட அநியாயங்கள் நடைபெற்றது

    ReplyDelete

Powered by Blogger.