மைத்திரிபால கைது செய்யப்படுவாரா..?
மைத்திரிபால சிறிசேனவை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காகவே இவ்வாறு கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது தென்னிலங்கை அரசியலில் பெரும் சலசலப்பை எற்படுத்த உட்கட்சி மோதல்கள் - அரசியல் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தையே விமர்ச்சிக்கும் நிலை காணப்படுகின்றன.
Post a Comment