கொழும்பில் சொகுசு கார் தீயில் கருகியது
கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் சொகுசு காரொன்று தீக்கிரையாகியுள்ளது.
நேற்று இரவு 10.20 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் தீயணைப்பு படையினரால் குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனினும், குறித்த கார் முழுவதுமாக தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment