Header Ads



ஊமை போன்று செயற்பட்ட பொன்சேக்கா - பீல்ட் மார்ஷல்களின் நடத்தை, ஒழுக்கம் பண்புகளை கற்க வேண்டும் - வீரசேகர


இலங்கை தொடர்பில் சர்வதேசத்தின் யுத்தக்குற்றச் சாட்டுக்கான சந்தேக விதையை விதைத்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று இராணுவத்தினர் தொடர்பில் பேசுவது வேடிக்கையானது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இந்தியா போன்ற நாடுகளுக்கு சென்று அங்குள்ள பீல்ட் மார்ஷல்களின் நடத்தை, ஒழுக்கம் பண்புகளை கற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், பீல் மார்ஷல் பதவியையும் வைத்துக்கொண்டு சபையில் நாகரீகமற்ற விதத்தில் உரையாற்றும் அவர், விடுதலைப்புலிகள் வெள்ளைக்கொடியுடன் வந்த வேளை இராணுவத்தினர் அவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தாகக் கூறி சர்வதேசத்தில் யுத்த குற்றச்சாட்டுக்கான சந்தேக விதையை தூவியவர் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:

எமது ஆட்சியில் தற்போது இராணுவத்தின் நலன்கள் தொடர்பிலும் அவர்கள் அருந்தும் ஒரு வேளைதேநீர் குறித்தும் கேள்வி கேட்கும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தான் அன்று சர்வதேசத்தினால் எமது இராணுவத்தின் மீது யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இராணுவத்தினர் குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்ட வேளையில் மௌனம் காத்தார்.

அதனை நல்லாட்சி அரசாங்கம் அமைதியாக ஏற்றுக்கொண்டு சர்வதேசத்திடம் மண்டியிட்ட போதும் அவர் ஊமை போன்று செயற்பட்டார் என்பதை குறிப்பிட்ட விரும்புகின்றேன். விடுதலைப்புலிகள் வெள்ளைக்கொடியுடன் வந்த வேளையில் எமது இராணுவத்தினர் அவர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தனர் எனக் கூறி சர்வதேசத்தின் யுத்த குற்றச்சாட்டுக்கான சந்தேக விதையை தூவியதும் சரத் பொன்சேகாவே என்பதை மறந்துவிடக்கூடாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

1 comment:

  1. உண்மையில் இவன் ஒரு லூசு.

    ReplyDelete

Powered by Blogger.