இலங்கையில் பாலியல் தொழில் சட்டமாக்கப்பட வேண்டும் - கோகிலா Mp
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
எனது மனசாட்சிக்கு அமைய நான் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிடுகிறேன். பெண் என்ற வகையில் பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதை நான் எதிர்க்கின்றேன்.
தனிப்பட்ட ரீதியில் பாலியல் தொழில் சட்டமாக்கப்படுவதை நான் விரும்புகிறேன்.
உலகில் புத்த பகவானின் காலத்தில் இருந்தே பாலியல் தொழில் இருந்து வருகிறது என்பதே இதற்கு காரணம். இது உலகில் மிகவும் பழமையான தொழில்.
தற்போது என்ன நடக்கின்றது..? பாலியல் தொழில் செய்யும் பெண்கள் சுரண்டப்படுவதில்லையா?. முச்சக்கர வண்டி சாரதி முதல் சம்பந்தப்பட்ட அனைவரும் அந்த பெண்ணை சுரண்டி சாப்பிடுகின்றனர்.
தனது உடலை விற்பனை செய்ய விரும்பும் பெண்களுக்கு, அதனை சட்டத்திற்கு அமைய செய்ய அனுமதித்தால், அப்பாவி பெண்கள் கஷ்டத்தில் விழ மாட்டார்கள்.
துன்புறுத்தல்களுக்கு உள்ளாக மாட்டார்கள். அவர்கள் தமது குடும்பம், பிள்ளைகளை காப்பாற்றி கொண்டு வாழ்வார்கள்.
பெண்களிடம் மேற்கொள்ளப்படும் இந்த சுரண்டலை நிறுத்த முடியும் என நான் தெளிவாக நம்புகிறேன். பெண் என்ற வகையில் பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதை நான் எதிர்க்கின்றேன்.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அந்த உரிமைகளை வழங்குமாறு நான் கூறவில்லை.
பெண்கள் என்ற வகையில் கிராமங்களில் இருக்கும் அப்பாவி பெண்களை அழைத்துச் சென்று விற்பனை செய்யும் நபர் 10 ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொண்டு, அந்த பெண்ணுக்கு வெறும் ஆயிரம் ரூபாவை வழங்குவதை நான் எதிர்க்கின்றேன் எனவும் கோகிலா குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அவர் சொல்வதும் சரிதானே. தன் பழைய தொழில் இவ்வாறு அங்கிகாரமற்றுக் கிடப்பதை தற்போது பாராளுமன்ற உறுப்பினரின் அந்தஸ்த்தில் இருந்து பார்க்கும்போது உறுத்துமல்லவா..!
ReplyDeleteஅது மாத்திரம்தான் இந்த நாட்டில் இந்த அரசில் எஞ்சி இருந்த அங்கிகாரம் இல்லாத அனாச்சாரம். இஸ்லாமிய ஒழுக்கம் இல்லை என்றால் இனி எல்லா அனாச்சாரம் உம் தானே வெளிவரும். மிக பெரிய உதாரணம் ஞான சாரா தேர
ReplyDelete