Header Ads



சந்திரிக்காவுக்கு வந்த கோபம்


முன்னாள் அமைச்சர் மங்களசமரவீரவை நினைவுகூறும் நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் அரசியல் கேள்வியை கேட்ட பத்திரிகையாளரை முன்னாள் ஜனாதிபதி கடுமையாக சாடியுள்ளார்.

மங்களசமரவீர கொரோனாவால் உயிரிழந்து மூன்று மாதங்களாவதை குறிக்கும் விதத்தில் நேற்று அவரது குடும்பத்தினர் மதஅனுஷ்டானங்களிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

பொரளையில் உள்ள ஜயரட்ண பார்லரில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் கலந்துகொண்டிருந்தார்.

அந்த நிகழ்வில்கலந்துகொண்டுவிட்டு முன்னாள் ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியவேளை அங்கு காணப்பட்ட பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் உரங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளமை குறித்து கேள்வியொன்றை கேட்டார்.

இந்த கேள்வியால் சீற்றமடைந்த முன்னாள் ஜனாதிபதி ஒருவரை நினைவுகூறும் நிகழ்வில் அரசியல் கேள்வியை கேட்பதா கடுமையாக சாடினார். TL

No comments

Powered by Blogger.