Header Ads



எனக்கு டொலரை உழைப்பதற்கான திறமையில்லை, ஆர்ப்பாட்டங்கள் எங்களிற்கு டொலரை பெற்றுத்தராது - கம்மன்பில


ஆர்ப்பாட்டங்கள் மூலம் நாட்டிற்கு தேவையான டொலரை உழைக்க முடியாது என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையத்தை திறக்குமாறு கோரி இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

டொலரை பாதுகாப்பதற்காகவே இலங்கை கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது என அவர் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து சப்புகஸ்கந்த எண்ணெய் தொழிற்சாலையின்அ நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது அவசியம் என கருதுவதாக தெரிவித்துள்ள அவர் எனினும் தொழிற்சங்கங்கள் அதனை புரிந்துகொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்கள் இதனை புரிந்துகொள்ளவில்லை என்பதே கசப்பான உண்மை ஆர்ப்பாட்டங்கள் எங்களிற்கு டொலரை பெற்றுத்தராது அமைச்சர் என்ற வகையில் எனக்கு டொலரை உழைப்பதற்கான திறமையில்லை என அவர் தெரிவித்துள்ளா.

No comments

Powered by Blogger.