எண்ணெய், எரிவாயு, பால்மா, பருப்பு விலை அதிகரிக்கும் - விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாது
உலகில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தொற்று நிலைமையின் பின்னர் பட்டினியே உருவாவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
எண்ணெய் விலையை அதிகரிப்பதற்கான தேவை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை கூறினார்.
ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை இன்னும் ஓரிரு நாட்களில் 100 ரூபாவை தாண்டும். ஆகவே, மசகு எண்ணெய் விலை அதிகரிக்கும். எரிவாயு விலை, பால்மா விலை, பருப்பு விலை ஆகியனவும் அதிகரிக்கும். தொற்று நிலைமைக்கு பின்னர் உலகில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பட்டினியே ஏற்பட்டுள்ளது. உலகில் இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் ஆகிய அனைத்து நாடுகளிலும் இந்த பொருட்களின் விலை எமது நாட்டின் விலையை விட அதிகமானது.
என பந்துல குணவர்தன கூறினார்.
மேலும், பெட்ரோலிய அமைச்சரால் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாது எனவும் அதிக விலைக்கு கொள்வனவு செய்து குறைந்த விலையில் வழங்க முடியாது எனவும் மாதாந்தம் ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் மாதாந்த செலவுக்கு ரூபா 2500 தாராளமாகப் போதும் என மார்தட்டிய உரைத்த பொருளாதார நிபுணர் தான் இந்த கலாநிதி வர்த்தக மந்தி(ரி)
ReplyDelete